Thursday, October 18, 2012

தினமணியின் ஆமைகள்

இல்லாமை, இயங்காமையால் தான் வந்தது!  அதாவது, சரியான திட்டங்கள் இல்லாமையால்!  ஆட்சிக்கு வந்த இரண்டு வருடங்களில் சூரிய சக்தி மின் திட்டத்தை முதலில் நடுத்தர வருவாய் பிரிவினருக்கு மட்டுமாவது எளிய தவணை கடன் திட்டம் மூலம் கொண்டு சென்றிருந்தாலே ஓரளவு பற்றாக்குறையை சரி செய்திருக்கலாம். 

ஒரு இன்வெர்ட்டர் வாங்க 17000 ரூபாய் தேவைப்படும்.  அதுவே, அதற்கு சமமான கொள்ளளவு கொண்ட ஒரு சூரிய சக்தி மின் உற்பத்தி சாதனத்தை நிறுவு செலவுடன் அமைக்க 27000/- மட்டுமே தேவைப்படும்.  அதையே எளிய கடன் தவணை திட்டத்தில் கொடுத்தால், இரண்டாவது லட்டு தின்ன கசக்கவா செய்யும்? (மின் கட்டணம் மிச்சம் அல்லவா?)

இது கூடவா தெரியாது தினமணிக்கு?  ஆதரிக்கலாம்.., ஆனால் கண்ணை மூடிக்கொண்டெல்லாம் ஆதரிக்கக்கூடாது. 
படித்தவர்கள் அதிகமாகிஇருப்பதை கவனத்தில்
கொள்ள வேண்டும்.

No comments:

Post a Comment