ஒரு வழியாக ராம ஜென்ம பூமி விவகாரத்தில் தீர்ப்பு வந்து விட்டது. தீர்ப்பை பற்றி நாம் சொல்வதற்கு ஒன்றுமில்லை. ஆனால் இந்த தீர்ப்பு பற்றிய பரபரப்பை கடந்த 15 நாட்களாகவே மக்களை ஜுரம் போல் தொற்றிக்கொள்ள வைத்துவிட்டன - மீடியாக்களும், மத்திய மாநில அரசுகளும்.
நாட்டில் 70 % மக்கள் ராமன் ஆண்டால் என்ன ராவணன் ஆண்டால் என்ன என்ற ரீதியில் இருப்பவர்கள் தான். இவர்களையே தங்கள் பிழைப்பை விட்டுவிட்டு அது என்ன என்று கூர்ந்து கவனித்து அதைப் பற்றி விவாதிக்கும் அளவுக்கு விட்டு விட்டது. அது மட்டுமா.. இன்று மட்டும் சுமார் 1 .5 லட்சம் லாரிகள் தங்கள் இயக்கத்தை நிறுத்திவிட்டன. தீர்ப்பு வரும் வரை வீடுகளிலும், அலுவலகங்களிலும் முடங்கிக் கிடந்தவர்கள் எத்தனை பேர்?
தீர்ப்பு வந்தவுடன் எல்லோருக்கும் ஒரு நிம்மதி வந்துவிட்டது. நிச்சயமாக கலவரம், அசம்பாவித சம்பவங்கள் நடக்காது என்ற எண்ணம் வெளிப்படையாக தெரிகிறது. 70 % மக்கள் வழக்கம் போல் தங்கள் வேலைகளை பார்ப்பார்கள் என்று நம்பலாம். ஆனால் மீடியாக்களுக்குத் தான் பாவம் 'சப்' என்று போய் விட்டது.
முன் ஏற்பாடுகள் விஷயத்தில் நாம் மத்திய மாநில அரசுகளை பாராட்டியே தீர வேண்டும். கடந்த இரு வாரங்களில் bulk SMS களுக்கு தடை ஏற்படுத்தியும்(Force), வதந்திகளை நம்ப வேண்டாம் என்று அறிவுறுத்தியும் (advice), போலீஸ்
உபகரணங்களைக் கொண்டு பயம் ஏற்படுத்தியும் (threatening) நன்றாக
நிலைமையை கட்டுக்குள் வைத்திருந்தன.
இந்த தீர்ப்பால் உளவுத் துறையும் காவல் துறையும் சற்று நிம்மதிப் பெருமூச்சு விட்டாலும், சிறு சிறு அசம்பாவித சம்பவங்கள் பதட்டமான பகுதிகளில் நடக்க வாய்ப்பிருக்கிறது - இதை தூண்டும் குறும்புக்கார பயல்களும், மத வெறி பிடித்த பாசக்கார பயல்களும் இருக்கும் வரை.
தம்மாத்துண்டு இடமான 2 .5 acres க்கு சுமார் 110 கோடி மக்கள் தொகை ஒரு கொண்ட தேசம் 60 ஆண்டுகளாக ஒரு தீர்ப்புக்கு காத்திருக்க வேண்டிய சூழ்நிலை.
அது சரி.. தீர்ப்பு வரும் நேரம் மின்சாரத்தை ஏன் துண்டித்தார்கள்? டி.வி.யை மக்கள் பார்க்க கூடாது என்று எண்ணத்திலா?
தீர்ப்பு..? அதை செய்தி சேனல்களிலும் நாளை தினசரிகளிலும் தெரிந்துகொள்ளுங்கள்.
என்னத்த சொல்ல...
ReplyDeleteநல்ல படியா தீர்ப்பு வந்தது.. :)
எங்க சென்னை-ல கலவரம் வேடிச்சுருமோனு ஒரு சின்ன பயம் இருந்து... :(
நன்றி மாதேஸ்வரன்.. நல்லவேளை எதுவும் நடக்கவில்லை. தங்கள் கருத்துக்களை தவறாமல் அனுப்புங்கள்.
ReplyDelete