Monday, August 30, 2010

வாங்க பாஸ்.. நம்ம இதெல்லாம் மறந்து போகிறது சகஜம் தானே...!!!!

ஒரு வழியாக இன்று அந்த "சிறப்பு தூதர்" வெளியுறவு செயலர் நிருபமா ராவ் என்பதும் அவர் இன்றே இலங்கை செல்வதும் உறுதி செய்யப்பட்டு விட்டது.

அவர் "இங்கு நாம் நலம் - அங்கு அவர்கள் அனைவரும் நலமே" என்று தி.மு.க. தலைவர் சொல்லிக்கொடுத்ததை திரும்ப வரும் போது சொல்லப்போகிறார்.

500 கோடி ரூபாயுடன் மேலும் ஒரு ரூபாய் சேர்த்து இலங்கை அரசு மிகவும் பெருந்தன்மையுடன் தமிழ் மக்களின் மீள் குடியிருப்பு பணிகள் அனைத்தையும்  திறம்பட நடத்துவதாகவும் இன்னும் ஓரிரு வாரங்களில் தமிழர்கள் அனைவரும் தத்தமது புதிய குடியுருப்புகளுக்கு சென்று விடுவார்கள் என்றும் அவர் சொல்லாவிட்டாலும் கூட நாம் நம்புவோமாக..  ஏனென்றால் நாம் தான் எல்லாவற்றையுமே சீக்கிரம் மறந்துவிடுவோமே...!!!

No comments:

Post a Comment