தருமபுரி பஸ் எரிப்பு வழக்கில் குற்றம் சாட்டப்பட்டவர்களில் மூவருக்கு உச்ச நீதி மன்றம் தூக்கு தண்டனையை உறுதி செய்து பரபரப்பு தீர்ப்பு வழங்கியுள்ளது.
காலம் கடந்த தீர்ப்பு என்று கொலை செய்யப்பட ஒரு மாணவியின் தந்தை வேதனையுடன் கூறியுள்ளது இங்கு கவனிக்கத்தக்கது.
ஆனால் அவர்கள் தூக்கில் போடப்படுவார்களா அல்லது ஏற்கனவே காத்திருக்கும் தூக்கு தண்டனை கைதிகள் பட்டியலில் அவர்களும் சேர்ந்து காத்திருப்பார்களா என்பது தான் இப்போதைய கேள்வி.
நம் அரசாங்கத்தின் இப்போதைய செயல் படாத நிலையை வைத்து பார்க்கும் போது அவர்கள் இன்னும் சில வருடங்கள் (??) உயிருடன் இருக்கப்போவது உறுதி. அவர்களுக்கு என்ன.. உயிருடன் இருந்தாலும் அல்லது போய் சேர்ந்தாலும் இரண்டும் ஒன்று தான். ஆனால் அவர்களின் குடும்பத்தவர்கள் அனு தினமும் அல்லவா செத்து கொண்டிருப்பார்கள். அதற்கு அந்த அரசியல் கட்சிக்காரர்களால் என்ன தர முடியும் - பணத்தைத் தவிர...
No comments:
Post a Comment